
இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil 20-05-24 | Today's Bible Gospel | நற்செய்தி வாசகம் |
#dailybibleverses #todaybibleverseintamil #todaysbibleverse #இன்றையநற்செய்திவாசகம் #இன்றையவசனம் #bibleverseoftheday #dailyBibleGospel #dailybibleverse #tamilbible #bibleverse #bible இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil 20-05-24 | நற்செய்தி வாசகம் | Start your day with the uplifting message from the Bible in Tamil. Hello Every One, Welcome to our You Tube Channel to watch more videos on Christian Songs, Christian Old and New Songs, Lyrical Videos, Jukebox, Prayers, Holy Rosary, Today's bible verses, Daily Gospel Text... Please Support and Subscribe our Channel. இயேசு நாதரின் இதயத்தில் இருந்து ரத்தம் வடிந்த ஆலயம்: • மும்பையில் நடந்த புதுமை | இயேசுவின் ... புனித இராயப்பரின் திருவிழா சிறப்பு பாடல்: • புனித இராயப்பரின் திருவிழா சிறப்பு பா... தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த கத்தோலிக்க ஆலயங்கள்: • தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த கத்தோலிக... முதல் வாசகம் 00:00:00 பதிலுரைப் பாடல் 00:01:36 நற்செய்தி வாசகம் 00:03:40 பொதுக்காலம் 7ஆம் வாரம் - திங்கட்கிழமை இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னை நினைவுக்கு உரியது. முதல் வாசகம் இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14 இயேசு விண்ணேற்றம் அடைந்த பின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3) பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. 1நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி 4எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும். 5‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி 6மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார். 7ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் இவரே உம் மகன்! இவரே உம் தாய்! யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27 அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். ஆண்டவரின் அருள்வாக்கு. For any Query and Feedback, Raja Pannilan 9320924253 [email protected]